முகமாலையில் 316 ஏக்கர் காணி விடுவிப்பு

141 0

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கன்னிவாடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி, இன்று (03) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி மையம் என்பனவும், இதன்போது, மக்களிடம் கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குறித்த காணிகளை கையளித்துள்ளனர்.