முல்லைத்தீவில் வயலுக்கு சென்ற விவசாயி உடலமாக மீட்பு!

224 0

முல்லைத்தீவு ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்றவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று  மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட குமுழமுனை  ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

36 அகவையுடைய பூதன்வயல் முள்ளியவளையினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடலத்தினை மீட்ட முல்லைத்தீவு காவல்துறையினர் உடலத்தினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு  மரண விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பாம்பு தீண்டி குறித்த விவசாயி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.