தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிடத்தில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தைக்கான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு முதன்முறையாக கடந்த யூன் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டபோதும் இறுதி நேரத்தில் அந்தப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர், பஷில் ராஜபக்ஷவின் பதவியேற்பு நிறைவடைந்ததன் பின்னர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தபோதும், அதற்கான செயல்ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், தற்போது கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இராஜதந்திரத் தரப்புக்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது கூட அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

