ஏ9 வீதியில் துண்டாகியது முதியவரின் கால்

148 0

கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று (30) தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி கடவையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டபோது டிப்பர் வாகனம் அவரை மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்தில் முதியவரின் கால் துண்டாகியதுடன், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.