கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தன்னார்வத் தடுப்பூசி என்பதால் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் வற்புறுத்த முடியாது என்றும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் பெரும் பான்மையினரின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காகத் தடுப்பூசி செலுத்தாவர்கள் பொது இடங்களுக்கு நுழையத் தடை விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் ஒரு தனிநபருக்குத் தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளதைப் போன்று, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அவருக்கு உரிமை இல்லை.
ஐரோப்பா முழுவதும் பொது இடங்களில் இத்தகைய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு சில வைரஸ்கள் வருவதை அறிந்த ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில், அந்த நபரையும் அவ்வாறான பொறுப்பிலிருந்து விடுவிக்க முடியாது.
பெரும்பான்மையினரின் நலனுக்காக இவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சுகாதாரத் துறையில் பணி யாற்றும் முன்னணி ஊழியர்களிடமிருந்து மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்றும், பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப் படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் 2 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி உள்ளது என்றும் மேலும் 14.5 மில்லியன் முன்பதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

