பூஜித், ஹேமசிறிக்கு எதிரான வழக்கைக் கைவிடுமாறு உத்தரவு

241 0
பூஜித், ஹேமசிறிக்கு எதிரான வழக்கைக் கைவிடுமாறு பதில் நீதவான் சஞ்சய கமகே ,இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை விசேட மேல் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
அதற்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த குறித்த வழக்கைக் கைவிடுமாறு பதில் நீதவான் சஞ்சய கமகே உத்தரவிட்டுள்ளார்.