வவுனியா ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு!

166 0

வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வறுமைக்குட்பட்ட மக்களுக்காக உதவும் வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கும் சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.