நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மீள திறப்பு!

255 0

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரிவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டலுக்கமைய 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் முதல் கட்டமாக 200க்கும் குறைந்த மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிாிவு வகுப்புகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரண்டாவது கட்டமாக 200க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு வகுப்புகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், கொவிட் பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சகல கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திறக்கப்படுவதாகப் பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.