இவ்வாண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பான தகவல்களையும், எதிர்ப்புகளையும் இன்று (21) முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
18 வயதைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக, வாக்காளர் பதிவுச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை, 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்களைக் கொண்ட முழுமையான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.