கொழும்பு, கிராண்ட்பாஸ், கஜீமா தோட்டப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

