சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதி

229 0

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த ஆஸ்பத்திரியில் ஏற்கனவே குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக மீண்டும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் என்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.

உடல் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் வீடு திரும்பினார்.