சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்

266 0

wikneசமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரட்டை நகர் உடன்படிக்கை தொடர்பில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதல்வர் சமஷ்டி முறையிலான தீர்வினை அரசாங்கம் நிராகரிக்கும் நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு என்ன என்று கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருகின்றனர். சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டும்.

எங்களை பிரிவினைப்படுத்தி பிரபாகரன் என்கிறார்கள் பிரபாகரனுக்கு எதிரானவர்கள் என்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்தும் எதிர்ப்பு கலாச்சாரத்தில் தான் ஈடுபட்டுள்ளோம். இது போன்ற ஒரு நிலை இனிமேலும் கிடையாது. என தெரிவித்தார்.

மேலும் முல்லைத்தீவு நகரினை அபிவிருத்தி செய்யும் வகையிலும் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும், கனடாவில் வாழும் தமிழ் தொழில் அதிபர்கள் முதலீடுகளை செய்யும் நோக்குடன் இரட்டை நகர திட்டம் கைசாத்திடப்படவுள்ளது.

கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் நகரம், மற்றும் முல்லைத்தீவு நகரங்களை இணைக்கும் இரட்டை நகர உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.