கைக்குண்டுடன் ஒருவர் கைது

133 0

திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டுடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியியலாளர் ஒருவர் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்

கிண்ணியா பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ பொறியியலாளரை சம்பவதினமான நேற்று இரவு கைது செய்ததுடன் கைக்குண்டு ஒன்றையும் மீட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டுவருவதுடன் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.