காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஐதீகமாக கருதுகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலம் இந்தியாவில் தமிழகத்தில் தெற்கோடியில் ராமேசுவரம் அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ராமாயணம் வரலாற்று தொடர்புடையது. இலங்கையை ஆண்டு வந்த ராவணன் இந்தியாவிலிருந்து ராமர் மனைவி சீதையை கடத்திச் சென்றார். இலங்கைக்கு கடத்தி சென்று தன் மனைவியை ராமர் மீட்டு வரும்போது ராமேசுவரத்தில் அவர் பாதம் பட்டதாலும், ராமர் சீதையுடன் சிறப்பு பூஜை செய்ததால் புண்ணிய தலமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

