மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

276 0

அனுமதி கிடைக்கப்பெறுமானால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை நாளை (21) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் உதவி பொது முகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாளை (21) முதல் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு ஏற்றிச்செல்வதற்கான சிசுசெரிய பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.