கேரள கஞ்சாவுடன் பெண் கைது

219 0

மன்னார் – பேசாலை 8ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரை மன்னார் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.