கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் மரணம்!

211 0

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

10 ஆண்களினதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகின.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (17) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,507 ஆக உயர்வடைந்துள்ளது.