கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக உளர்ச்சார்பு பாடத்தின் மீள் பரீட்சை காலவரையரையன்றி பிற்போடப்பட்டிருந்தது.
தற்போது இப்பரீட்சையை நடத்துவதற்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சம்மந்தப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சை அனுமதி அட்டைகள், இம்மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறவில்லையாயின், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்று மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.