இலங்கை மின்சார சபையின் நீர்கொழும்பு பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், மின்சார கட்டணங்களைச் செலுத்தாது நிலுவையிலுள்ள மின் பாவனையாளர்கள், குறித்த கட்டணங்களைத் தாமதிக்காது செலுத்துமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை, கல்லொழுவை, பொல்வத்தை, கொட்டுகொடை, புருல்லப்பிட்டிய மற்றும் நில்பனாகொட ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின்கட்டணங்களைச் செலுத்தாமல் இருப்பதாக, நீர்கொழும்பு பிராந்திய மின் பொறியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்ள மாதாந்த மின்சாரப் பட்டியல்களில் காணப்படும் நிலுவைக் கட்டணங்களை தாமதிக்காது உடனடியாக செலுத்துமாறு,; கேட்டுக்கொண்டுள்ளார்.

