இந்தியா தமிழர்களின் விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள்!

265 0

இந்தியா தமிழர்களின் விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலே மூன்றாவது சக்தியாக இந்தியாவைத் தவிர வேறு எவரும் காலூன்ற அனுமதிக்கவும் மாட்டோம் அவ்வாறான நிலையொன்று உருவாகினால் அதனை நாம் எதிர்ப்போம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேர்காணலில் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பில் இடம்பெறும் மண்கொள்ளை தொடர்பாக  பட்டியல் ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் அதனை தான் எதிர்காலத்தில் வெளிப்படுத்தினால் பல சர்ச்சைகள் வெளிக்கிழப்பும் எனவும் இராசமாணிக்கம் சாணக்கியன் நேர்காணலில் பரபரப்பு தகவலொன்றையம் வெளிப்படுத்தினார்.

குட்டி ஹிட்லர் போன்று செயற்படுபவரின் அடாவடித்தானத்தினாலும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலும் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டமே பாலைவனமாக மாறப்போகின்றது என்றும் சாணக்கியன் கூறினார்
<