அம்பாறையில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

237 0

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.

ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவை, தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார ஊழியாகள், வைத்தியசாலைக்கு முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.