உரிய ஆவணங்களுடன் திருக்குமார் நடேசனை 15 ம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வேண்டுகோள்

302 0

பன்டோரா பேப்பரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை பத்துமணிக்கு இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரான திருக்குமார் நடேசன் 1.30 மணிவரை வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

உரிய ஆவணங்களுடன் மீண்டும் வருவதற்கான வாய்ப்பை வழங்குமாறு திருக்குமார் நடேசன் கோரினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிய ஆவணங்களுடன் 15 ம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.