இராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
இராகலை காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த தீவிபத்தில் சிறுவர்கள் இருவரும், இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

