உடுமலையில் 130 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலையில் 143 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பிறந்தது முதல் 6 வயது குழந்தைகள் வரை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், சுகாதாரக்கல்வி, ஊட்டச்சத்தும் அளிக்கப்படுகிறது.
அதேபோல் பாலூட்டும் பெண்கள் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்ட அறிவுறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ‘போஷான் டிராக்கர் ஆப்’ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்படுகிறது.

