எம்மிடம் அதிகாரம் இல்லாததால் யுகதனவ் மின் ஆலையின் ஒப்பந்தத்தை எங்களால் தடுக்க முடியவில்லை!

138 0

யுகதனவ் மின் ஆலையின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தைத் தடுக்கக் காரணம் நான் உட்பட சிறு அரசியல் கட்சிகளுக்குப் போதுமான அதிகாரம் இல்லாததே என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை இணையத்தளத்தில் அறிவிக்காமல் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தை தான் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் எழுப்பிய பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாவிட்டால் அது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித் துள்ளார்.