ஆசிரியர்கள், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பல அமைப்புகள் ஆதரவு!

138 0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டரை மாதங்கள் முடிவடைந்த போதிலும் இன்னும் ஒரு தீர்வையேனும் வழங்கவில்லை. அரசாங்கம் நேரத்தை வீணடிக்கிறது.

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமனதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் கோரிக்கைகளை வெல்லும் வரை போராட்டத்தை ஆதரிக்கவுள்ளதாக அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.