வர்த்தகர்கள் இழப்பை சந்தித்தால் நாட்டில் அத்தியாவசியப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்- நாமல்

139 0

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் போது நுகர்வோர்களின் நலன்களையும் வர்த்தகர்களின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் இழப்பை சந்தித்தால் நாட்டில் அத்தியாவசியப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.