முன்பள்ளி, ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்

290 0

பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஆரம்ப பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.