வடக்கில் நேற்று 62 கொவிட் தொற்றாளர்கள்

180 0

வவுனியா மாவட்டத்தில் 33பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா மருத்துவமனை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களின் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூட முடிவின் பிரகாரம்,

யாழ்.மாவட்டத்தில் 24 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேரும்,மன்னார் மாவட்டத்தில் இருவரும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.