கொரோனாவால் யாழில் இருவரும் வவுனியாவில் ஒருவரும் உயிரிழப்பு

251 0

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருவரும்,வவுனியாவில் ஒருவருமாக வடக்கு மாகாணத்தில் நேற்று மூவர் உயிரிழந்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே உயிரிழந்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கந்தசாமி தவமணிதேவி (வயது 64), யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த செல்லையா இலங்கநாதன் (வயது 75)ஆகியோர் உயிரிழந்தனர்.

இதேவேளை வவுனியா பொது மருத்துவமனையால் மாதிரி அனுப்பப்பட்ட மேரி யோசப்பின் பி. மரியநாயகம் (வயது 85) என்பவரும் உயிரிழந்தார்.