வவுனியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89 வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்

297 0

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்த வர்களில் 89.25 வீதமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித் துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட் தொற்றுப் பரவல் தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், இறப்புகளும் தொடர்கின்றன.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதன் மூலமே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள். 10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் பெற்றுக் கொண்டவர்கள். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் கொவிட் காரணமாக மரணிக்கவில்லை.

எனவே, 20 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்று தங்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.