யாழில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற 35 பேர் கைது

228 0

யாழ்ப்பாணத்தில் இரு பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்ற 35 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் பிரபல ஹோட்டல் ஒன்றிலும், ஓட்டுமடத்தில் வீடு ஒன்றிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் காவல் துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையிலேயே இரு பிறந்த நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்ற 35 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிய வருகின்றது.