அரியாலையில் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி!

227 0

தகாத உறவால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து காதலனுடன் சேரந்து மனைவி திருகுவளையால் கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் யாழ்ப்பாணம், அரியாலை – பூம்புகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்தப் பயங்கரச் சம்பவத்தில், அரியாலை பூம்புகாரில் வசித்து வந்த அச்சுவேலியைச் சேர்ந்த துரைராசா செல்வகுமார் (வயது 32) என்பவரே கொலையானார்.

கொலையானவரின் மனைவி, முறையற்ற உறவில் ஒருவருடன் ஈடுபட்டார் என்றும் இது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மனைவியும் அவரின் காதலரும் இணைந்து திருகு வளையால் கணவரை அடித்துக் கொன்றனர் என்றும் பொலிஸா ரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.