பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்

157 0

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 19 பதக்கங்களை வென்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.

இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  19 பதக்கங்களை வென்றுள்ளது.