டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு விழாவில் அவனி லெகாராவுக்கு கவுரவம்

165 0

டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைகிறது.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கோலாகலமான நிறைவு விழா அரங்கேறுகிறது. இந்த விழாவில் இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தைப் பெற்றுள்ளார்.
நிறைவு விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.