யாழில். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

285 0

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/26  கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/432 மற்றும்  J/433 ஆகிய இரு  கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.