இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில்

377 0

asதெற்காசியாவில், இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
பதுளை பொது மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது சுமார் 3 ஆயிரம் மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
எனினும், இது சுகாதார துறையில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
என்றாலும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அவர், தெற்காசியாவில் இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்திலே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.