வடக்கு மீனவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

356 0

kalpakkam porattam  (14)இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது
இது தொடர்பில் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது முடிவெடுக்கப்பட்டதாக மன்னார் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளன இணையத்தின் தலைவரான மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்