எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்-PHI

165 0

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நாட்டில் 3839 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை, நேற்றுமுன்தினம் 195 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போதைய நிலைமைக்கு அமைய எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.