மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் – சம்பிக்க

172 0

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“போரை வெற்றி கொண்டதைப் போன்று கொரோனா வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசு செயற்பட்டதால் இன்று நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.

கொரோனாத் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு 10 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் நாட்டை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம் பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடையாது.

அரசைப் புறக்கணித்து மக்கள் ஊரடங்குச் சட்டத்தை சுயமாகப் பிறப்பித்து ஜனாதிபதிக்கும், அரசுக்கும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள் என்றார்.