கிளிநொச்சியில் கோவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

160 0

கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபர் ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

90 வயதுடைய குறித்த வயோதிபர் திடீரென உயிரிழந்த நிலையில் அவருடைய பி.சி.ஆர். மாதிரிகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஊடாக யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.