கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொட்டகலை நகரம் இன்று (19) முதல் ஒருவாரகாலத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை நகர வர்த்தக சங்கம் சுயமாக முன்னெடுத்திருந்தது. இக்கோரிக்கையை ஏற்று வர்த்தக நிலையங்களை மூடிய கொட்டகலை வர்த்தகர்களுக்கு சங்கத் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.