வவுனியா தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன

161 0

கோவிட் பரவலைக் கருத்தில் கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புதன், வெள்ளி ஆகிய தினங்களில் வவுனியா தலைமை தபால் அலுவலகத்திற்குப் பொதுமக்கள் வருகை தருவதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.