குடிநீர் தாங்கியின் ஏணியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

182 0

கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதபுரம் மாவடி பகுதியில் உள்ள குடிநீர் தாங்கியின் ஏணியில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (18) காலை குறித்த சடலம் இனம்காணப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லையா சிவன் என்பவேரே இவ்வாறு நீர்தாங்கியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.