சம்மாந்துறை கோட்டக்கல்வி முன்னாள் பணிப்பாளர் கொரோனாவால் மரணம்

167 0

சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமக்கோட்டத்தின் முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட்(70) கொரோனாத் தொற்றுக் காரணமாக நேற்று முன்தினம் மரணமானார்.

சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள கொரோனா விசேடபிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

அவரது இழப்பையிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உள்ளிட்ட கல்விசார் கல்விசாரா அணியினர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்கள்.