மன்னார் மாவட்டத்தில் யேர்மனி வூப்பெற்றால் மற்றும் போகும் வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் கொரோனா நிவாரணம்.

492 0

மன்னார் மாவட்டத்தில் வங்காலைக் கிராமத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவுகளினைச் சேர்ந்த மக்களில் மிக வறுமைநிலையில் வாழுகின்ற 100 குடும்பங்களுக்கு யேர்மன் நாட்டின் வூப்பெற்றால் (Wuppertal), போகும் (Bochum) நகரங்களில் வாழும் தமிழ் மக்களின்  நிதிப்பங்களிப்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியினை வழங்கிய யேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு மன்னார் மாவட்ட மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.