ஆனையிறவுப் பகுதியில் விபத்து!

180 0

கிளிநொச்சி பளை காவற்துறை பிரிவிற்குட்பட்ட ஆனையிறவு பகுதியில் யாழ் நோக்கி பயணித்த கப் ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. ஆனையிரவு ஏ9 வீதி வளைவு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏ9வீதியை கடந்து டிப்பர் ரக வாகனம் குடை சாய்ந்துள்ளது.

விபத்தில் சாரதிகள் சிறு காயங்களிற்குள்ளாகினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பளைக் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.