செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

202 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 15 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க காவல்துறையினர் இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர்

குறிப்பாக ஊடகவியலாளர்களை கூட மறித்து அடையாள அட்டை பார்வையிட்டே குறித்த பகுதியில் செல்ல அனுமதிக்கின்றனர்

குறிப்பாக நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.குறிப்பாக உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோரை கூட குறித்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை