*2016 க்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளும் இந்த ஆண்டு முடிவடையும். *முஸ்லி ம் திருமண சட்டத்தை திருத்துகின்றபோது பலதார மணம், குவாசி நீதிமன்றங்கள் இ ரத்து செய்யப்பட வேண்டும்
*இரண்டுமே சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் எனினும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது *பருவகாலம் எக்ஸ்-பிரஸ் பேர்ள் சிதைவை அகற்றுவதில் தடங்கலாக நிற்கிறது
00000000000
1979 இல்பயங்கரவாத தடை சட்டம் இயற்றப்பட்டது. அப்போதிருந்து, பயங்கரவாதத்தின் வடிவங்களும் பயங்கரவாதத்தின் முறைகளும் மாற்றம் அடைந்தன.. விடுதலைப் புலிகள் மற்றும் ஜேவிபி அவற்றின் கிளர்ச்சியின் போது பயன்படுத்திய பழைய தந்திரங்களை இனி பயன்படுத்த முடியாது. இன்று, பயங்கரவாதிகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும்கறுப்பு பணத்தை தூயதாக மாற்றுதலை நிதி ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். தீவிரமயமாக்கலுக்கு அவர்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளில், மெய்நிகர் நாணயங்கள் கூட பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சவால்களை ஆராய வேண்டும்.
000000000
குறிப்பிட்டசிலவிடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம்,கவலைகளை எழுப்பியுள்ளது.கவலைகள் சரியானவையாக இருந்தால், நாங்கள் அதை கருத்தில் கொள்வோம். நாங்கள் அவர்களுடன் செயற்படுவோம்.. ஆனால், இலங்கையில் கூட, பயங்கரவாத தடை சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. சிவில் சமூகம், அரச அதிகாரிகள் மற்றும் அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இதற்கு அழைப்பு விடுத்துள்ளன.
0000000000
பல சட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. பொது திருமண கட்டளை சட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் பரிசீலனையில் உள்ளது. இது இப்போது வரைவின் இறுதி கட்டத்தில் உள்ளது. நாங்கள் தொடர்மாடி உரிமை சட்டம், கொ ண்ட மோனியும் னியம் சொத்து சட்டம், குத்தகை மற்றும் வாடகை சட்டங்கள் போன்றவவைதொடர்பாகவு ம் செயற்பட்டு வரு கிறோம்.
0000000000
சில பெண்கள் உரிமைகள் அமைப்புகள் பலதார மணத்தை ஒழிப்பதற்கு ஆதரவாக உள்ளன. ஆனால், சில மத அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இதற்கு எதிராக உள்ளன. இரு தரப்பு பிரதிநிதிகளும் என்னை சந்தித்தனர்.இறுதியில் அமைச்சரவை ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
000000
நீதியமைச்சர் அலி சப்ரி, பயங்கரவாதத் தடைச் சட்டம்,முஸ்லிம் திருமணம் ,விவாகரத்துச் சட்டம் மற்றும் ஏனையவற்றை த் திருத்தும் செயல்முறை குறித்து டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்நீதியமைச்சர் அலி சப்ரி,தனது கருத்துக்களைதெரிவித்திருக்கிறார்.அத்துடன்பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் தொடர்பான விட யங்களுக்கும் அவர் பதிலளித்திருக் கிறார்.
பேட்டி வருமாறு