கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் (10) உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தவிசாளரும் இன்று (12) அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

